Total Pageviews

Saturday, December 25, 2010

இலக்குவனார் நூற்றாண்டு நிறைவைச் சிறப்பாகக் கொண்டாட விரும்பிய இலக்கியவீதி இனியவன் தாம் வாழும் அண்ணாநகரில் இவ்விழாவை நடத்த முடிவெடுத்தார்.அண்ணாநகர்த் தமிழ்ச்சங்கம் என்னும் அமைப்பு இருபத்தெட்டாண்டுகளாக இயங்கிவருகிறது.புலவர் த.இராமலிங்கம் அவர்களைத் தலைவராகவும் அரிமா சுந்தரராசுலு அவர்களைச் செயலாளராகவும் கொண்டு சிறப்புறத் தமிழ்ப்பணியாற்றிவரும் இவ்வமைப்புடன் இணைந்து விழா நடத்த விழைந்து ௧௯/௧௨/௨0௧0 ஞாயிறுக்கிழமை விழாநாளாக அறிவிக்கப்பட்டது.

இலக்குவனார் நூற்றாண்டு விழா

இலக்குவனார் நூற்றாண்டு விழா உலகின் பல பகுதிகளில் தமிழன்பர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது.அச் செய்திகளையெல்லாம் ஒரே இடத்தில் தொகுத்தளிக்கும் முயற்சிதான் இவ் வலைப்பூவை உருவாக்கியுள்ளது.